அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அங்கீகாரம்! ( Unapproved Plot Registration)
தெரிந்தோ, தெரியாமலோ அன்அப்ரூவ்டு என்று சொல்லப்படுகிற அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கியவர்களே இன்றைக்கு தமிழகத்தில் அதிகம். குறைந்த விலையில் கிடைப்பதால், இந்த மனைகளையே அதிகம்பேர் வாங்கி இருக்கிறார்கள் அல்லது வாங்கியும் வருகிறார்கள். பல மனைகள் குறைவான பரப்பில் (சுமார் 600 ச.அடி) போடப்பட்டிருப்பது மற்றும் குறைவான அகலத்தில் சாலைகளுக்கு இடம் விடப்பட்டு இருக்கின்றன. இந்த அன்அப்ரூவ்டு மனைகளில் வீடு கட்ட அனுமதி மற்றும் வங்கிக் கடன் கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு, பலர் வீடு கட்ட முடியாமல் இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத அனைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவர இருக்கிறது. இதற்கான திட்ட தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாகவும், இதற்கு அங்கீகாரம் அளிக்கும் அரசாணையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் பிஸியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தில், புதிதாக லேஅவுட் போடப்படும்போது நகரமைப்புத் துறை (டி.டிசி.பி) அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ)